சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்ப்பு
சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து வருடங்களாகச் சமையல் எரிவாயுவின் விலையில் மீளாய்வு மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இரண்டு எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.
தாம் நட்டங்களை எதிர்நோக்குவதாக கூறியே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நிறுவனங்களின் கோரிக்கை முன்வைக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.