யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்று துறை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு
உலக சிறுவர் தினம் ஆகிய இன்றைய நாளில் 2024/10/01 யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை 2ம் வருட மாணவர்கள் சிறுவர் தின நிகழ்வை வரலாற்று கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் ஸ்தான சி.த.க அ. த. க.பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வில் வரலாற்று துறை மாணவர்கள் தம்மை அறிமுகப்படுத்தியதோடு மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக பல முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர்.
இந்த நிகழ்வில் மாணவர் எதிர் காலத்தில் எவ்வாறு நற் பிரஜையாக வாழ வேண்டும் இலட்சியம் என்பது என்ன போன்ற பல விடயங்களை பாடசாலை மாணவர்களுடன் உரையாடலை மேற்கொண்டு இருந்தார்கள்.
மாணவர்களின் திறமை
அதனை தொடர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக "போட்டி இருக்கலாம் பொறாமை என்பது இருத்தல் கூடாது"என்னும் தொனிப்பொருளில் மாணவர்ககளை நான்கு குழுவாக பிரித்து விளையாட்டு நிகழ்வுகளையும் மேற்கொண்டு இருந்தார்கள்.
அத்தோடு மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக பல கலை நிகழ்வுகளையும் மேற்கொண்டு இருந்தனர்.
குறித்த நிகழ்வில் நல்லூர் ஸ்தான சி. த. க, அ. த. க. பாடசாலையின் முதல்வர் மாணவர்களுக்கு பல கருத்துக்களையும் வழங்கினார்.
மேலும் யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் மதிப்புக்குரிய சாந்தி அருளானந்தம் பல விடயங்களை நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கூறி இருந்தார்
அத்தோடு இவ் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.