மதுபான போத்தல்களில் ஒட்டுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியானது: புத்திக பத்திரன
இலங்கையில் விற்பனை செய்யப்படும் மதுபான போத்தல்களின், மூடியில் ஒட்டுவதற்கு மதுவரி திணைக்களத்தினால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு (ஒட்டி) ஸ்டிக்கர் போலியானது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது இன்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் போலியானது என தெரிவித்தார்.
மோசடி

திணைக்கள அதிகாரிகள் சிலருக்கு தெரிந்தே இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த பத்திரன, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மதுபான போத்தல்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர் நிதி அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் மதுவரி திணைக்களத்தினால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்டிக்கர் அச்சிடும் பணி இந்தியாவில் தடைப்பட்டியலில் உள்ள மெட்ராஸ்
செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் (எம்எஸ்பி) என்ற பிரபலமற்ற இந்திய நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டதாக பலர் குற்றம் சாட்டியதை அடுத்து சர்ச்சை ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan