மதுபான வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
மது பாவனை குறைந்துள்ள போதிலும் கடந்த 10 மாதங்களில் மதுவரி வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தீர்மானித்ததன் காரணமாக இந்த மதுவரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி மது பாவனை
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு அமைவாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பாதுகாப்பு ஸ்டிக்கரால் போலி மது பாவனை முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஸ்டிக்கரில் பல இரகசிய அடையாளங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டிக்கர் போலியானதா என்பதை கண்டறியும் கருவிகள் கலால் திணைக்களத்திடம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
