வீடுகளை ஒப்படைக்காமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் 5 முன்னாள் உறுப்பினர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வீடுகளை பொறுப்பெடுக்கும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 20 உறுப்பினர்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்க வீடுகள்
உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடுகள் வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 40 புதிய உறுப்பினர்கள் வீடுகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
