அனுர குமாரவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்த முக்கியஸ்தர்கள்
இலங்கையில் கணக்காய்வாளர் நாயகம் பதவியை வகித்த இருவர் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayaka) ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகங்களான சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் காமினி விஜேசிங்க ஆகியோர் இவ்வாறு அனுரவிற்கு தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று(30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நிலை
தீர்மானமிக்கதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தற்போதைய மற்றம் கடந்த கால தலைவர்களே நாட்டின் பொருளாதார நிலைக்கு காரணம் என சந்திரசிறி மாயதுன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதிய அரசியல் தலைமை தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 2015ம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியானது நாட்டின் வீழ்ச்சிக்கான ஓர் முக்கிய காரணம் என காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கேட்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டுமென இந்த இருவரும் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
