கோட்டாபயவுடன் அவசர சந்திப்பு! முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக தகவல் - செய்திகளின் தொகுப்பு
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை குறைக்க அரசாங்கம் பேச்சு நடத்திவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதில் மேற்படி விலை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள் பற்றி பேச்சுநடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திளின் தொகுப்பு,