இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடரவேண்டும்! சஜித் கோரிக்கை
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகையைத் தொடரவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினருடனான சந்திப்பின் போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். இதன்போது இலங்கையில் மனித உரிமைகள் விடயங்கள் மோசமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகையைத் தொடருமாறு, சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் நிலையை மறுபரிசீலனை செய்யும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
