ஜனாதிபதியை சந்தித்தது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்பானது சற்று முன்னர் (20.09.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த குழு தமது விஜயத்தின் நோக்கத்தை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டதுடன், அமைதியான தேர்தலுக்கான பின்னணியை ஏற்படுத்தியமைக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கண்காணிக்கப்படும் தேர்தல் கால நடவடிக்கைகள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு முன்னதாக தெரிவித்திருந்தது.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் இடம்பெறும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினத்தில் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமாவது, வாக்களிப்பு, வாக்குகள் எண்ணப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது போன்றவற்றை குறுகிய கால கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
