நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உணவுக் கொள்கைக் குழு அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
வரி விகிதம் குறைப்பு
இதன்போது அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெங்காயத்தின் விலைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரியை 10 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
வெங்காய இறக்குமதி
இதனால் வெங்காய இறக்குமதி வெகுவாகக் குறைந்து, ஆகஸ்ட் மாதத்தில் 27,889 மெட்ரிக் டன்னாக இருந்த வெங்காயத்தின் அளவு நவம்பர் மூன்றாவது வாரத்தில் 13,496 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 175 ரூபாவாக இருந்ததுடன் தற்போது 328 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செப்டெம்பர் மாதத்தில் அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டமையே இந்த திடீர் விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வெங்காயத்தின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.