கதிர்காமத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் எசல பெரஹரா உற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை 3ஆம் திகதி மஹா பெரஹரா இடம்பெற்று, மறுநாள் பெரஹரவுடன் ‘தியா கெப்பீம’ நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரஹரா திருவிழா
இந்த பெரஹரா திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைக்கு வரவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க மூன்று பாடசாலைகளின் கட்டடங்களை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.
இதன்படி, செல்லக்கதிர்காமம் மஹா வித்தியாலயம், தெட்டகமுவ மஹா வித்தியாலயம் மற்றும் கதிர்காமம் தேசிய பாடசாலை ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan

உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதம் எது தெரியுமா? 10 ஆண்டுகளில் 34 கோடிக்கும் அதிகமான மக்கள் News Lankasri
