வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம்: ஈரோஸ் கட்சி எடுத்துரைப்பு
நாட்டை பாதுகாத்த - வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் தலைவிதியை தீர்மாணிக்கும் நாள் எதிர்வரும் 29 திகதி ஆகும்.
3 வேட்பாளர்கள்
இத் தேர்தலில் 3 வேட்பாளர்கள் பிரதான வேட்பாளராக களமிறங்கிய இருக்கின்றார்கள். ஆனால் அதில் உள்ள 3 வேட்பாளர்களும் மக்களை நேசிப்பவர்களாக இருந்து வருபவர்கள் என நாம் அறிவோம்.
கோட்டாபய நாட்டை காப்பாற்ற அழைப்பு விடுத்த போது நாட்டையும், மக்களையும் நேசித்து யாருமே முன்வந்து நாட்டை பெறுப்பேற்காத போது தனி ஒரு மனிதராக ரணில் நாட்டை பெறுப்பெடுத்து ஒன்றரை வருட காலத்தில் நாட்டை மீட்டெடுத்துள்ளார்.
இவருக்கு இன்னும் 5 வருடங்கள் வழங்கினால் நாட்டின் நிலையை எப்படி மாற்றுவார் என சிந்தித்துப் பாருங்கள்.
இன்று எனக்கு இரவு பகலாக பல கக்கங்களிலும் இருந்து அழைப்புக்கள் சஜித்திற்கு ஆதரவு வழங்குங்கள், JVP க்கு வாக்களியுங்கள் என்கிறார்கள்,
ஆனால் நாம்
சிந்தித்தே செயற்படுவோம்.
நாட்டை பாதுகாத்த - வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என
மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்” என்றார்.