மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் இயந்திர கோளாறு (Photo)
மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் நேற்று ஏற்பட்ட இயந்திர கோளாரினால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதையடுத்து நேற்று மாலையே பொறியியலாளர்களால் புகையிரதம் சரிசெய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா - ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் வவுனியா -ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்து நின்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொறியியலாளர்கள் புகையிரத்தை சரிசெய்துள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் நேற்று இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மதவாச்சி பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் வவுனியா -ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்து நின்றுள்ளது.
நீண்ட நேரமாகியும் புகையிரத கோளாறு சீர்செய்யப்படாமையினால் அதில் பயணித்த பொதுமக்கள் பேருந்துகளில் ஏறி தமது பயணத்தினை தொடர்ந்திருந்தனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
