முடிவின்றி நிறைவடைந்த பிரதமருடனான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் தமது முடிவை, நாளை காலையில் அறிவிப்பதாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர், ஆசிரியர்களுக்கான அடிப்படை வேதன முரண்பாடு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்கள் தொடர்ந்தும் இணைய வழி வகுப்பு பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்,எதிர்வரும் பாதீட்டில் முன்மொழியப்படவுள்ள தீர்வு தொடர்பிலேயே பிரதமருக்கு, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்களுக்கும் இடையில் நேற்றும், இன்றும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.