நிறைவுக்கு வந்த 7 நாள் போராட்டம்: மீண்டும் திறக்கப்படும் அஞ்சல் அலுவலகங்கள்
தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அஞ்சல் பணியாளர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் மீண்டும் பணிகளை ஆரம்பிக்க இணங்கியதாக, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை திங்கட்கிழமை முதல் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், நிர்வாகப் பிரிவுகளில் கைரேகை பதிவு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்க அரசாங்கம் தயாராக இல்லை, ஆனால் மீதமுள்ள 17 கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பணிநிறுத்தம் முடிவு
இதன்படி, நிர்வாகப் பிரிவுகளில் கைரேகை பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.
அத்துடன், மார்ச் முதல் நடைமுறைக்கு வரும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கூடுதல் நேர கட்டண விதிமுறைகள் எந்த மாற்றங்களும் இல்லாமல் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று மாலை 4.00 மணியுடன் அஞ்சல் பணியாளர்களின் பணிநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமைச்சர் ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
