இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயணித்த பேருந்திலிருந்து மீட்கப்பட்டுள்ள தோட்டாக்கள்
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்காக இந்தியா சென்ற இலங்கை அணி வீரர்களின் பேருந்தில் இருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொஹாலியில் இலங்கை டெஸ்ட் அணி வீரர்களை அழைத்து சென்ற பேருந்திலிருந்தே இவ்வாறு 2 வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மொஹாலியில் பயிற்சி மைதானத்திற்கும், விடுதிக்கும் இடையில் இலங்கை வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்ட பேருந்தில் இருந்தே தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வெற்று தோட்டாக்களை இந்திய காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
