கொழும்பு வாழ் மக்களுக்கான அவசர அறிவித்தல்
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை 16மணி நேர நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த நீர் விநியோகத்தடை நடைமுறையில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை மாநகர சபை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதவிர, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிக்காவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நாளை மறுதினம் 16மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
