மூடப்படும் டுவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள்: ஊழியர்களுக்கு விதிக்கப்படும் கடும் நிபந்தனைகள்
டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டடங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அதன் ஊழியர்களிடம் டுவிட்டர் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி திங்கட்கிழமை அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அதன் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
எலோன் மஸ்க்கின் அறிவிப்பு
ஏராளமான ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இரகசிய தகவல்களை ஊடகங்கள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு டுவிட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், டுவிட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார்.
டுவிட்டர் ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு நாளைக்கு அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரை விட்டு வெளியேறும் ஊழியர்கள்
நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இது தொடர்பான உறுதிமொழியை வழங்க சம்மதிக்க வேண்டும் என மஸ்க் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கி சேவையிலிருந்து வெளியேறப்படுவர் என்று மஸ்க் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Elon Musk (@elonmusk) November 18, 2022