மட்டக்களப்பில் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் விரட்டியடிப்பு
மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து 35 காட்டு யானைகள் நேற்று (22.08.2024) மாலை கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.
இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துக்கு தடை
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், சுமார் 2 மணித்தியாலத்திற்குப் பின்னர் அப்பகுதி பொதுமக்களின் ஒத்துழைப்புடன், காட்டு யானைக்கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர்.
இதனால் மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியின் போக்குவரத்துக்கு சுமார் அரை மணி நேரம் தடை ஏற்பட்டிருந்தது. .
குறித்த பிரதேசத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து இவ்வாறு தொடர்சியாக காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும், அதிகரித்த வண்ணமேயுள்ளன.
காட்டுயானைகள் கிராமங்களுக்குள் உட்புகும் பகுதிகளை ஊடறுத்து யானைப் பாதுகாப்பு வேலைகளை அமைத்து தருமாறு அப்பகுதி மக்களின் கோரிக்கையை இன்றுவரை யாரும் நிறைவேற்றுக் கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.