ஆனையிறவு உப்பு என்றே சந்தைப்படுத்தப்படும்.. ! யாழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இந்தப் பெயரை கண்டவுடன் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில ஊடகவியலாளர்களும் ஒரு சில வலையொலி செய்பவர்களும் இதனை பெரிதுபடுத்துகின்றார்கள் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "இந்த உப்பளம் மூடி இருக்கின்ற பொழுது இதனை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் எந்தவித பேச்சுக்களையும் இவர்கள் பேசவில்லை. ஆனால் ஒரு உண்மையுள்ளது. இந்த உண்மையை நான் அந்த நிகழ்வின் மேடையிலேயே தெரிவித்தேன்.
அந்த ராஜ லுணு எனும் பெயர் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட பெயர் ஆகவே நாம் எங்களுடைய பாரம்பரிய பெயரான ஆனையிறவு உப்பு அறிமுகமாகி வெளிவரும். ஆகவே இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri