யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்

Jaffna Hinduism
By Shadhu Shanker May 11, 2025 06:18 PM GMT
Report

கடந்த 07.05.2025 அன்று யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள வட பத்திரகாளி கோவிலின் இரவு நேர திரு மஞ்சத்திருவிழாவின் போது உபயகாரர்களினால் யானை கொண்டுவரப்படிருந்தது.

இதன் போது மிகச் சத்தமாக வான வெடிகள் வெடிக்கப்பட்டு தாவடியூர் மட்டுமல்லாது அருகிலிருந்த ஊர்களும் அதிர்ந்தது.அது மட்டுமல்லாது செண்டி மேளம். தீப்பந்தம் சுற்றுதல் போன்ற இதர நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.

ஐம்பதிற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

சிகிச்சைக்காக அனுமதி

இந்த கேளிக்கை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கென அருகிலுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தமையால் கோவிலில் வழமைக்கு மாறாக சன நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

அதேவேளை யானைகளுடன் படம் எடுப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தமையினால் பலரும் யானைகளுடன் நின்று படமும் எடுத்துள்ளனர். தொடர்ச்சியான வெடிச் சத்தம் மற்றும் தீப்பந்த விளையாட்டினால் யானை மிரண்டுள்ளது.

யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் | Elephant Attack In Jaffna Temple

இதன் போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தும்பிக்கையினால் நெஞ்சில் தாக்கியுள்ளது.அத்தோடு அதே பெண்ணூக்கு காலினால் தொடைப்பகுதியில் தாக்கியுள்ளது.

குறித்த பெண் தொடை எலும்பு பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அந்த தாயின் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளை யானையுடன் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியுடன் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட தில் முகம் உட்பட உடலின் பல பகுதியில் கடுமையான உரோஞ்சல் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.

இவ்வாறு யானை செல்கையில் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது பிள்ளைகளை யானை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர்களை இழுத்துவிட்டு அவர் நிலத்தில் விழுந்துள்ளார்.

இதன் போது யானையும் கீழே விழுந்து குறித்த தாயின் முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் தனது முழங்காலை ஊன்றி எழும்பியதில் அத்தாயின் கால் பகுதி சிதைவடைந்துள்ளது.

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை

குறித்த தாயும் கணவரும் 20 நிமிடங்களுக்கு மேலாக துடித்த போதும் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.

பின்னர் சில நல்ல எண்ணம் கொண்ட இளைஞர்களால் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முழங்காலுக்கு கீழ்ப் பகுதி அகற்றப்பட்டு மற்றைய கால் பாதத்திலும் பலத்த காயப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் இந்த நிகழ்வின் போது உடனடியாக ஆலய நிர்வாகமோ, உபயகாரரோ குறித்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. அதன் பின்னர் கூட சம்மந்தப்பட்ட உபயகாரரோ ஆலய நிர்வாகமோ இதுவரை குறித்த பெண்களை தொடர்புகொள்ளவில்லை.மாறாக உபயகாரர் சார்பாக 15 இற்கு மேற்பட்டோர் வைத்திய சாலைக்கு வந்து சென்றுள்ளனர்.

யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் | Elephant Attack In Jaffna Temple

அத்தோடு இது தொடர்பாக செய்திகளை எழுதுபவர்களுக்கு மிரட்டும் பாணியில் இவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது.

ஒரு யானை ஆலயத்திற்கு அழைத்துவருகிறார்கள் எனின் அதற்கேற்ற முறையான முற்பாதுகாப்பு நடவடிக்கை அனைத்தையும் ஆலய நிர்வாகமும் உபயகாரரும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

வெறுமனே பொலிஸ் பாதுகாப்பு மட்டும் போதுமா? தீ அணைப்புவண்டி, அம்புலன்ஸ் வண்டி எங்கே? யானைகள் முறைப்படி சட்ட ரீதியாக அனுமதி பெற்று கொண்டுவரப்பட்டதா? முதலுதவிக்காண என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா? யானையின் இயல்பு சனப்பொழுதில் மாறக்கூடியது.

அன்றையதினம் யானை மதங்கொண்டிருந்தால், நிலைமை என்ன ஆகியிருக்கும் யானையை அடக்கக் கூடிய வல்லமை பொலிஸாருக்கு உண்டா? அல்லது அவர்கள் அதற்கான பயிற்சி பெற்றவர்களா? இவர்கள் பணபலம், அதிகார பலம், ஆட்பலம் உள்ளவர்கள் ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு மூலம் கொடுப்பதற்கே பயப்படுகின்றனர்.

உபயகாரரின் கடந்த கால செயற்பாடுகள் அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்வதற்கு மக்கள் பயப்படுகின்றமைக்கான காரணம் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான தீர்வை காலம் தான் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US