மின்கட்டண அதிகரிப்பு: மக்களின் கருத்துக்களைக் கோருகிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோரவுள்ளது.
இதற்கான காலப்பகுதி பெப்ரவரி 25 முதல் மார்ச் 18 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை 13.56% இனால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது.
முன்மொழிவு சமர்ப்பிப்பு
பொது மக்கள் இந்த முன்மொழிவு தொடர்பான தமது கருத்துக்களை பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்.
எழுத்துமூல சமர்ப்பிப்புகள்: ஆணைக்குழுவின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

வாய்மொழி மூல சமர்ப்பிப்புகள்: தீர்மானிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் அமர்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
வாய்மொழி மூல கருத்துக்கேட்பு அமர்வுகள் மாவட்ட ரீதியாக நடைபெறும் அமர்வுகளின் விபரங்கள் வருமாறு, மார்ச் 07 - அம்பாறை; மார்ச் 11 - வவுனியா; மார்ச் 12 - மாத்தளை; மார்ச் 16 - ஹம்பாந்தோட்டை; மார்ச் 18 - இறுதி அமர்வு பெறப்படும்.
அனைத்துப் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னரே, மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri