மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக குறைவடைந்துள்ள போதிலும் மின்சார உற்பத்தி தொடரும்.
மின்சார உற்பத்தி
அடுத்த மழைக்காலத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 20 வீதத்தை எட்டும் வரை மின்சார உற்பத்தியை தொடர முடியும்.
தற்போதைய மின் உற்பத்தியில் எந்த பிரச்சனையும் இல்லை, நீர் ஆதாரம் மற்றும் பிற ஆதாரங்களை நாங்கள் நிர்வகிக்கிறோம்.

உலக சந்தையில் நிலக்கரி விலை குறைந்துள்ளது, எனவே தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam