சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு - நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரத் தடையை சீர்செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளின் கீழ், சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விநியோக மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் மீது மரங்கள் விழுந்துள்ளன.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை
மின் தடையை சீரமைக்க தங்களால் முடிந்தவற்றை செய்வோம் எனவும் அதற்கான ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அறுந்து விழுந்த மின்கம்பிகளை எந்த வகையிலும் தொடவேண்டாம் எனவும் ஊழியர்களின் பணிகளில் தடை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நெரிசல் காரணமாக அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாது எனவும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் விரும்பிய விரைவான சேவையை வழங்க முயற்சித் வருகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
