மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணம்: மனவேதனையில் மகிந்த
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தினால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், தான் பயணிக்கும் அனைத்து இடத்திலும் தமது சிரமங்களை வெளிப்படுத்தி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம்
கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், கட்சியில் பல இளைஞர்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் உருவாகுவார் என்றும் கூறினார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 19 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
