மின்கட்டண அதிகரிப்புக்கு முட்டுக்கட்டை! ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க முடிவு
மின்சார கட்டணத்தை அதிகரிக்க விடாது பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தடையாக இருப்பதால் அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை நீக்குவதற்கான யோசனையை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அரசின் யோசனைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ஆதரவு தெரிவித்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.