எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவிற்கு வரவேண்டும்: சரித ஹேரத் - செய்திகளின் தொகுப்பு
எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவிற்கு வரவேண்டுமெனவும், ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என சுதந்திர மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தேர்தலை ஒத்திவைத்து, மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்த ஆட்சியாளர்கள் படுதோல்வி அடைந்ததே இந்நாட்டு வரலாறு என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிகளுக்கே மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,