தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி சிக்கலில் (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தனின் நிலை கேள்விக்குரியதாக உள்ளது என யாழ்.பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.டி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகவோ அல்லது ஒரு முழுமைப்படுத்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட ஒன்றாகவோ இதுவரையில் அந்த கட்சி ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வடக்கு கிழக்கு ஒரு ஆரோக்கியமான அரசியல் நகர்வை செய்ய வேண்டிய தேவைப்பாடு இந்த காலப்பகுதியில் உள்ளது.
இந்நிலையில் ஒரு ஆரோக்கியமான அரசியலுக்குரிய முதிர்ச்சி தன்மையோடு செயற்பட வேண்டிய தேவை தமிழரசியல் தலைமைகள் மற்றும் தமிழரசியல் கட்சிகளுக்கு உள்ளது.”என கூறியுள்ளார்.