தேர்தல் கூட்டத்தில் சீருடையில் தாதியர்: அறிக்கை கோரியது தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனுசரணையுடன் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள், சீருடைகளுடன் பங்குபற்றியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, குறித்த சந்திப்பில் சீருடை அணிந்த தாதியர்கள் இருந்தமை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம், தங்களுக்கு நேரடியாக தொடர்புடையது அல்ல என்றாலும், தங்களுக்குக் கிடைத்த பல முறைப்பாடுகள் காரணமாக, தாம் விளக்கம் கோரியதாக அவர் கூறினார்.

கடமை விடுப்பு
இதேவேளை, அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற, தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri