அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு
இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவானது சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி இந்தக் கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலை மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம்
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தமக்கிடையே மேற்கொண்டுள்ளதுடன், அதன் நீட்சியாக அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் அது தொடர்பாக கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர்.