தேர்தல் குறித்து அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உண்டு: ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டாயமாக நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முறையை இரத்து
ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கு நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் அல்லது ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பதவி வகிக்கும் அரசாங்கம் சட்ட ரீதியானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது எளிமையான ஒர் செயற்பாடு கிடையாது எனவும், அது அரசியல் அமைப்புடன் நேரடித் தொடர்புடையது எனவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri