வவுனியா விபத்தில் முதியவர் ஒருவர் பலி
வவுனியா - இலுப்பையடி பகுதியில் இன்றையதினம் காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இலுப்பையடி பகுதியில் முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 56) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan