யாழில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு!
யாழில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் அச்சுவேலியில் உள்ள உறவினரை சந்திக்க வந்துள்ளார். இந்நிலையில் இவர் 27ஆம் திகதி இரவு அச்சுவேலி பகுதியில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு வீதியை கடப்பதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது வீதியால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உடற்கூற்று பரிசோதனை
இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகள் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
