சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் - தம்பியை கொலை செய்த அண்ணன்
குருநாகல் பொலிஸ் பிரிவின் குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார்.
சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம்
கொலை செய்யப்பட்ட நபர் நேற்று இரவு தனது சகோதரரின் வீட்டில் மற்றொரு குழுவுடன் மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது அவரது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததாகவும், இதனையடுத்து சகோதரர் அவரை வாளால் குத்திக் கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை பிணவறையில் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
