யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் மகாசேனனின் “ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்” நூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், முதிகலை மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது.
நாளை பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலமையில் இடம் பெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி சி ரகுராம் , சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளைகள் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், கலந்து கொள்ளவுள்ளவுள்ளனர்.
நூல் அறிமுக உரையினை அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தவுள்ளதுடன், ஆயவுரையினை சமூக அரசியல் விமர்சகர் ம.நிலாந்தனும் நிகழ்த்தவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |