இந்தியாவில் ஈழத்தமிழர் குடியுரிமை தொடர்பாக அரசின் அதிரடி முடிவு
நாங்கள் உங்கள் எதிரி என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு கூற முயற்சிப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஈழத்தமிழர் குடியுரிமை தொடர்பான அரசின் முடிவு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்தியாவினை பொறுத்தமட்டில் பாகிஸ்தானை போன்றே இலங்கையையும் அவதானித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் ஈழத்தமிழர்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்திய கட்டமைப்பாக இந்தியாவின் புலனாய்வு அமைப்பு செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஆராய்கிறது ஊடறுப்பு நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri