மின் உற்பத்திக்கு வரப்போகும் சவால் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு
தற்போது நிலவும் எல் நினோ வானிலையானது, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மின்கல சேமிப்பு அமைப்புகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், மின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தயாரித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மின்சார அமைப்பு
அமைச்சர் கருணாதிலகவின் கூற்றுப்படி, மின்கல சேமிப்புத் திட்டத்தின் முதல் கட்டம், இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேசிய மின்சார அமைப்புக்கு 160 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் சேமிப்புத் திறன், மின்சார அமைப்பை வலுப்படுத்த உதவுவதோடு, தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலைகளால் மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடிய காலங்களில் ஒரு மாற்று ஏற்பாட்டையும் வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தியில் மாறிவரும் வானிலையின் தாக்கத்திற்கு இலங்கை தயாராகி வருவதால், அதிகாரிகளும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது