சஞ்சீவ கொலை சம்பவம்! இஷாரா செவ்வந்தி தொடர்பில் விசாரணைகளில் வெளியான தகவல்

Crime Death Gun Shooting
By Dharu Feb 24, 2025 12:44 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதில் பிரதான சந்தேகநபராக தேடப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குற்றத்தைச் செய்த பிறகு, 19 மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும்,  வழக்கறிஞர் வேடத்தில் இருந்த  இஷாரா செவ்வந்தியையும்  முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸாரின் தேடுதலில் வாளுடன் சிக்கிய நபர்!

பொலிஸாரின் தேடுதலில் வாளுடன் சிக்கிய நபர்!

மேற்கொள்ளப்பட்ட விசாரணை

நீர்கொழும்பில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் குறித்த சந்தேகநபர்கள் இதற்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியானது, நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சஞ்சீவ கொலை சம்பவம்! இஷாரா செவ்வந்தி தொடர்பில் விசாரணைகளில் வெளியான தகவல் | Eight Suspects Arrested So Far Court Shooting

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, கமாண்டோ சலிந்து என்ற சந்தேகநபர் கடோல்கெலே பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏறி கொச்சிக்கடையில் உள்ள ரிதிவெல்ல பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது  அவர் வைத்திருந்த பையானது முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே வீசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர், மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபருடன், வைக்கல பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கை! குற்றம் சுமத்தும் எதிர் தரப்பு எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கை! குற்றம் சுமத்தும் எதிர் தரப்பு எம்.பி

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வைக்கல தொடருந்து  நிலையம் அருகே இறங்கியதாகவும், இஷாரா செவ்வந்தி கொப்பரா சந்திபகுதியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் அதை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சஞ்சீவ கொலை சம்பவம்! இஷாரா செவ்வந்தி தொடர்பில் விசாரணைகளில் வெளியான தகவல் | Eight Suspects Arrested So Far Court Shooting

இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் செல்ல பயன்படுத்திய வானை வைத்திருந்ததற்காக அதுருகிரி பொலிஸை சேர்ந்த கான்ஸ்டபிள் ஹசித ரோஷன் (37) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வானில் காணப்பட்ட  ஒரு பற்றுச்சீட்டில் இருந்த தொலைபேசி எண்ணின் அடிப்படையில் அவர் கொட்டாவாவில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸா் அதிகாரியின் கூற்றுப்படி, வான் தற்போது வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான ருவிந்த என்பவரால் அவருக்கு வழங்கப்பட்டது என்றும், மேலும் அவரது அறிவுறுத்தலின் பேரில் வானை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவரை ஏற்றிச் செல்ல வழங்கியதாகவும், கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​துப்பாக்கிகள்,  தோட்டாக்களும்,ஐஸ் போதைப்பொருள் படிந்த மின்னணு அளவுகோல் மற்றும் ஒரு கார்  கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரலில்! தமிழரசுக்கட்சி திட்டவட்டம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரலில்! தமிழரசுக்கட்சி திட்டவட்டம்

இஷாரா செவ்வந்தி

இந்த விசாரணைகளின்படி, தற்போது தலைமறைவாக உள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபர், கொலையில் தொடர்புடைய அனைவரையும் வாட்ஸ்அப் மூலம் வழிநடத்தியதாக கூறப்படுகிறது.

சஞ்சீவ கொலை சம்பவம்! இஷாரா செவ்வந்தி தொடர்பில் விசாரணைகளில் வெளியான தகவல் | Eight Suspects Arrested So Far Court Shooting

இந்நிலையில் இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் கூறியள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் கொழும்பு கூடுதல் நீதவான் திரு. ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலும் விசாரணைக்காக அவர்களை தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US