முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்?
உற்பத்தி விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முட்டையின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 22 ரூபாவிற்கு நுகர்வோருக்கு முட்டைகள் வழங்கப்படுவதாகவும்,எதிர்காலத்தில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சந்தையில் சீனி மற்றும் அரிசி என்பவற்றின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.