யாழில் அமெரிக்க கலாச்சார விழுமியங்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி - மேனகா நய்யர்
அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் நேற்று(27.04.2026) இடம்பெற்ற 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில், அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்டமைப்பு வசதிகளுக்கான வேலைத்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் Freedom 250 முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய "Freedom 250 Pavilion" கூடத்தினையும் இதன்போது தூதரகம் திறந்து வைத்தது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடமானது, உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஊடாட்டத்திற்கான ஒரு தளமாக Jaffna Social Action Center உடனான பங்காண்மையுடன் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

திறனாய்வுச் சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்களில் திறன்களை கட்டியெழுப்பும் அதேவேளை, அமெரிக்காவைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.
யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தகவல் கூடமானது, வட இலங்கையில் வளர்ந்துவரும் தலைவர்களை அமெரிக்க அனுபவங்களிலும், கண்ணோட்டங்களிலும் வேரூன்றிய சிந்தனைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. ஊடாடும் நிகழ்ச்சித் திட்டங்களையும் சமூக நிகழ்வுகளையும் நடத்துவதற்கான இத்தகவல் கூடத்தின் திறனை Freedom 250 Pavilion விரிவுபடுத்துவதோடு, ஒத்துழைப்பு, கலந்துரையாடல் மற்றும் கற்றலுக்கான ஒரு ஊக்கம் நிறைந்த இடமாக அதன் பங்கினை மேலும் வலுப்படுத்துகிறது.
250 ஆண்டுகள் நிறைவு
அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்திலமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிக்கிறது.
எமது ஸ்தாபக இலட்சியங்களையும், யாழ்ப்பாணம் உட்பட உலகம் முழுவதும் காணப்படும் எமது பங்காண்மைகளையும் எடுத்துக்காட்டும் ஒரு மைல் கல்லான, அமெரிக்க சுதந்திரத்தின் 250 வருடங்களை அமெரிக்கா இந்த வருடம் ஜுலை மாதம் 4ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

புதிய Freedom 250 Pavilion கூடம் மற்றும் எமது நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றினூடாக, அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து, எமது வரலாறு, சமூகம் மற்றும் புத்தாக்கங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு சமூகத்தை நாம் அழைக்கிறோம்.
" யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடமானது 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 10,000இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயனடையும் வகையில் ஏறக்குறைய 400 நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியுள்ளது.
இலக்கம் 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இத்தகவல் கூடமானது, அமெரிக்கா, ஆங்கில மொழியினைக் கற்றல், கல்வி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் திறன் சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன தொடர்பான வளங்களை இலவசமாக வழங்குகிறது.
எமது இத்தகவல் கூடத்திற்கு நேரில் வருகை தருவதன் மூலமாகவோ, அல்லது 021 222 0665 எனும் தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது info@americancornerjaffna.com மூலமாகவோ இங்கு நடைபெறும் இலவச நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்கலாம். ஊடாட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஊடாக அமெரிக்க மக்கள், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் கருத்துக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஓர் வரவேற்புமிக்க சூழலையும் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பாண்டி எனக்கு வேண்டாம், திருமணமே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த வானதி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் Cineulagam