கல்வியியலாளர்களால் பெரும் அச்சத்தில் அநுர!
திறமையான கல்வியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறு தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல என்றாலும் தற்போது அவர்கள் வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியபாடுகள் காணப்படுகின்றன.
பொருளாதார ரீதியாக சாதகமான திசையில் நாடு சென்று கொண்டிருக்கிறது என்பதை ஆளும் தரப்பு வலியுறுத்தினாலும் நடைமுறை சாத்தியபாடுகளும் செயற்பாடுகளும் வேறுபட்டவகையில் அவதானிக்க கூடியதாய் உள்ளது.
கடந்த ஆண்டு நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கையர்களில் 41 சதவிகிதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என தரவுகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் தற்போது அரசாங்கத்துக்கு சவாலாக மாறியள்ள காரணிகள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரவாக ஆராயப்பட்டது.
இதன்போது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி சில விடயங்களை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறும் கல்வியியலாளர்களால் ஏற்படும் சவால்களையும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri