கல்வி அமைச்சு எடுத்துள்ள முடிவு! வெளியான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80 வீத பாடசாலை வருகைத் தேவை டிசம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்குப் பொருந்தாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் - 19 நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,