தற்கொலை செய்து கொள்வார்கள்! அணுகுண்டை போட்டு அனைவரையும் கொன்று விடுங்கள் - கொழும்பு மக்கள் ஆதங்கம்
தற்போது அனைத்து பொருட்களினதும் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, எனவே அடிமட்ட மக்களால் வாழ முடியாது என்பதால் மக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என கொழும்பில் மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக விலையேற்றங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ்வருட இறுதியில் பஞ்சம் ஏற்படும் என பலரும், அதிலும் குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிட்டு வருகிறார்.
அடுத்த மாத இறுதிக்குள் ஏற்படப் போகும் பாதிப்பு! வெளியான எச்சரிக்கை |
இவ்வாறானதொரு சூழலில் கொழும்பிலுள்ள மக்கள் பலரிடம் எமது செய்தி சேவை கருத்துக்களை பதிவு செய்துள்ளது.
விலை அதிகரிப்பு
மக்கள் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பால் எல்லா விதத்திலும் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வேறு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்தால் மாத்திரமே இலங்கையால் மீள முடியும். இல்லாவிட்டால் இலங்கைகுள் இருப்பவர்களால் எதையும் செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
பஞ்சம்
ஏற்கனவே வறுமையில் தான் இருக்கின்றோம். இதை விட வருட இறுதியில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் சோமாலியாவின் நிலை தான் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை வெளிநாடுகள் கைகொடுத்தால் தவிர இனி இலங்கை தானாக மீண்டு வரும் சாத்தியம் இல்லை. எங்கேயிருந்தாவது அணுகுண்டை பெற்று வந்து இலங்கையில் போட்டு எல்லோரையும் கொன்று விடுங்கள் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கம் மாற்றம்
மேலும், அரசாங்கத்தை எதிர்கால தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டும். காலிமுகத்திடல் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களிடம் கையளித்தால் நாடு மீளும் சாத்தியம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.