இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! பல மில்லியன் டொலர் வருமானம்
2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற பெருந்தோட்ட பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானம்
தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி ஊடாகவே இவ்வாறு பல மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டின் பெருந்தோட்ட பயிர்களினால் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்களாகும்.
அதன்படி கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை விட 234 மில்லியன் டொலர்கள் வருமானம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெற முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri