நாட்டின் பொருளாதார நெருக்கடி: ஆளும், எதிர்தரப்பு எம்.பி.க்களுடன் பிரதமர் கலந்துரையாடல்-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான செயற்திட்டம் தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால நிலவரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நிலைப்பாடுகளைப் பெற்று, செயற்திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,