இலங்கையைப் போன்றே பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி
இலங்கையைப் போன்று பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
நாட்டின் மத்திய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஒஃப் பாக்கிஸ்தானின் வசம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 4.343 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
இது, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே முன்னெடுத்துச் செல்ல போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி
அந்நிய செலாவணி கையிருப்பின் ஆபத்தான அளவு பாகிஸ்தான் முழுவதும் உணவு விலைகளில் கடுமையான பணவீக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. இதனால் பல மில்லியன் கணக்கான மக்கள் உணவு மற்றும் எரிசக்தி இல்லாமல் கஸ்டப்படுகின்றனர்.
'பைனான்சியல் போஸ்ட்' அறிக்கையின்படி, பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட சரிவானது, ஐக்கிய அரபு இராச்சித்தின் இரண்டு வங்கிகளுக்கு ஒரு பில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்திய பின்னரே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணம் 15.8 பில்லியன் டொலரிலிருந்து 14.1 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம், ஆறு பில்லியன் டொலர் கடனில் ஒரு பகுதியை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, சீனா போன்ற நட்பு நாடுகளிடமிருந்து மேலும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இதேவேளை பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், கடந்த 2010ஆம் ஆண்டு, பாகிஸ்தானிய முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தானிய மக்கள் கட்சி ஆகியவற்றை அழிக்க நிறுவிய கலப்பு திட்டமே, அந்த நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று இந்திய செய்திச்சேவை ஒன்று கூறுகிறது.
இந்த அமைப்பு, ஐஎஸ்ஐயின் அப்போதைய பணிப்பாளர் நாயகம் சுஜா பாஷாவினால்
அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இந்திய செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.