காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
காலிமுகத்திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு - ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஊறணி சந்தியில் நேற்று இரவு 7 மணிக்கு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஊறணி சந்தியிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையாரடி வரையும் சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாடத்தையடுத்து அந்த பகுதியில் இருக்கும் இராஜாங்க அமைச்சர்
எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்காரர்கள் நுழைவார்கள் என்ற
அச்சத்தையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri