காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
காலிமுகத்திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு - ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஊறணி சந்தியில் நேற்று இரவு 7 மணிக்கு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஊறணி சந்தியிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையாரடி வரையும் சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாடத்தையடுத்து அந்த பகுதியில் இருக்கும் இராஜாங்க அமைச்சர்
எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்காரர்கள் நுழைவார்கள் என்ற
அச்சத்தையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam