மைத்திரிபால உள்ளிட்ட தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கரவினால் குறித்த உத்தரவு நேற்று(11.12.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல்
கட்டுவா பிட்டிய குண்டுத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு 182ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri