உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்களை விசாரிக்காமல் பாதுகாக்க அல்லது தடுக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார்.
ஊடகங்களிடம் இந்த மறுப்பை வெளியிட்ட அவர், பாதுகாப்பு பிரதி அமைச்சரின் ஒரு அறிக்கையுடன் தொடர்புப்படுத்தி பரவும் அறிக்கைகளை நிராகரித்துள்ளார்.
ஊடக அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள்.
எனவே, தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
வழக்கு குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள்தான் தொடர்புடைய அறிக்கைகளை வெளியிடுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
