சுரேஷ் சாலே மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு.. திடுக்கிட வைக்கும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி!

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Suresh Salley
By Sajithra May 22, 2026 11:11 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தாக்குதல் நடந்த அன்று அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே அசாத் மௌலானாவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகக் கூறினார்.

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, திலீப பீரிஸ் இந்த தகவலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். 

குறித்த தொலைபேசி அழைப்பின் மூலம், காலிமுகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இருக்கும் ஒருவரின் தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அவருக்கு உதவி செய்து, அவரை குறிப்பிட்ட இடத்திலிருந்து இறக்கிவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை மீண்டும் ஆரம்பம்! பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

கபில சந்திரசேனவின் மரண விசாரணை மீண்டும் ஆரம்பம்! பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

துண்டிக்கப்பட்ட அழைப்பு  

இருப்பினும், அழைப்பில் தான் மட்டக்களப்பில் இருப்பதாக அசாத் மௌலானா கூறியதும், சுரேஷ் சாலே தொலைபேசி அழைப்பைத் துண்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

சுரேஷ் சாலே மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு.. திடுக்கிட வைக்கும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி! | Easter Attack Update Suresh Sallay Call

திலீப பீரிஸ், தெஹிவளை ட்ரொபிகல் இன் விடுதியில் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த அப்துல் லத்தீப் ஜமீல் தான் அழைப்பில் குறிப்பிடப்பட்ட நபர் என்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும், அப்போதைய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் (TID) பணிப்பாளராக இருந்த தற்போதைய கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, அந்தக் காலப்பகுதியில் அப்துல் லத்தீப் ஜமீல் ஒரு பயங்கரவாதி அல்ல என்று அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் லத்தீப் ஜமீல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, 2017 நவம்பர் 08 அன்று அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஒரு விரிவான கடிதத்தை அனுப்பியிருந்தார்.

ஜமீல், ஐ.எஸ் (IS) அமைப்பின் சித்தாந்தத்தின்பால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர் என்றும், 2015 ஏப்ரல் 12 அன்று சிரியாவில் உயிரிழந்த முதல் இலங்கை ஐ.எஸ் உறுப்பினர் மொஹமட் முஹுசின் நிலாமுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும், 2014 நவம்பர் 12 அன்று துருக்கிக்குச் சென்றவர் என்றும் அதில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

கட்டுநாயக்கவுக்கு வந்த பல விமானங்கள் அவசரமாக திருப்பி அனுப்பி வைப்பு..

கட்டுநாயக்கவுக்கு வந்த பல விமானங்கள் அவசரமாக திருப்பி அனுப்பி வைப்பு..

பயங்கரவாதி அல்ல.. 

மேலும், அவர் மேற்கத்தேய உணவு மற்றும் ஆடைகளை நிராகரித்து கொழும்பில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஐ.எஸ் சித்தாந்தத்தைப் பரப்பி வருவதாகவும், பிற மதத்தினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த புலனாய்வு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுரேஷ் சாலே மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு.. திடுக்கிட வைக்கும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி! | Easter Attack Update Suresh Sallay Call

இந்தத் தகவல்களின் அடிப்படையில், பொலிஸ்மா அதிபர் 2017 நவம்பர் 09 அன்று விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அல்லாமல், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் (TID) ஒப்படைத்துள்ளார். 

அப்போதைய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஏப்ரல் 12 அன்று ஜமீல் அப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது அவர் ஷரியா சட்டத்தை விரும்புவதாகவும், ஆனால் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இல்லை என்றும், துருக்கிக்கு தனது சகோதரருடன் ஒரு கண்காட்சிக்காகச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர் TID பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வருண ஜயசுந்தர, 2019 மார்ச் 06 அன்றும், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரான 2019 ஏப்ரல் 08 அன்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

அதில் ஜமீல் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர் அல்ல என்றும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரதேசவாசிகளுடன் இணக்கமாக, அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ஒழிக்க நடவடிக்கை.. ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!

அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ஒழிக்க நடவடிக்கை.. ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!

மாயமான சிசிடிவி காட்சிகள்.. 

இருப்பினும், இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட காலப்பகுதியிலும் ஜமீல் உள்ளிட்ட குழுவினர் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

சுரேஷ் சாலே மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு.. திடுக்கிட வைக்கும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி! | Easter Attack Update Suresh Sallay Call

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த அன்று, ஜமீல் முதலில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்து அங்கு ஒரு தாக்குதலைத் திட்டமிட்டுள்ளார். ஆனால் குண்டு வெடிக்காததால் அது தோல்வியடைந்தது.

அதன்பிறகு, அவரது தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பிறகு, அவர் ஹோட்டலை விட்டு வெளியேறி, ட்ரொபிகல் இன் விடுதியில் தனது பையை வைத்துவிட்டு, அசாத் மௌலானாவின் வீட்டிற்கு அருகிலுள்ள எபனேசர் மசூதிக்குச் சென்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது. 

அங்கு தங்கியிருந்து வெளியே வந்தபோது, அமீர் என்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி அவரைச் சோதனையிட்டதுடன், ஜமீலின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்பிறகு, ஜமீல் மீண்டும் ட்ரொபிகல் இன் விடுதிக்குச் சென்று குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார். ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு முன் அவருக்கு யார் அழைப்பு விடுத்தார்கள் அல்லது அவர் எபனேசர் மசூதிக்குச் சென்றதன் நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஜமீல் தொடர்பான ட்ரொபிகல் இன் சம்பவத்தை TID விசாரித்ததும், ஜமீலின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமரா (CCTV) அமைப்பை அவர்கள் எடுத்துச் சென்ற பிறகு, ஜமீல் வீட்டிலிருந்து வெளியேறிய நேரம் முதல் புலனாய்வு அதிகாரிகள் அந்த வீட்டிற்கு வரும் வரையிலான முக்கியமான காலப்பகுதிக்கான காட்சிகளும் காணாமல் போயிருப்பதும் விசாரணைச் செயல்முறை தொடர்பாக கடுமையான சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை: உறுதியளித்த பிமல் ரத்நாயக்க

கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை: உறுதியளித்த பிமல் ரத்நாயக்க

கொடுக்கல் - வாங்கல் தகராறு: மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை

கொடுக்கல் - வாங்கல் தகராறு: மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை

நாணய மாற்றுச் சந்தை முடக்கம் : நச்சுச் சுழற்சிக்குள் இலங்கை - ஹர்ஷ எச்சரிக்கை

நாணய மாற்றுச் சந்தை முடக்கம் : நச்சுச் சுழற்சிக்குள் இலங்கை - ஹர்ஷ எச்சரிக்கை

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US